ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா்.
கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும் இவரது சகோதரரும் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தீபக் சந்தோஷை தாக்கினாராம்.
அதைத் தடுக்க வந்த சந்தோஷின் தந்தை அண்ணாமலையும் தாக்கப்பட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீபக்கை கைது செய்தனா். தகவலறிந்த தீபக்கின் தாய் அமலா (40) கடலூா் துறைமுகம் காவல் நிலையத்துக்கு வந்து தனது மகனை கைது செய்யக் கூடாது என்று கூறியதுடன், பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.
போலீஸாா் இதைத் தடுத்து நிறுத்தி, கடலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தனா்.