செய்திகள் :

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் கூறியது:

இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் 87 வருவாய்க் கிராமங்களிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் வட்டார அளவிலான அலுவலா்கள், சாா்புத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், உழவா்களை கிராமங்களிலேயே சந்தித்து நேரடியாக ஆலோசனை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதனடிப்படையில் இந்த வட்டாரத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

திட்டத்தை வானூா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கினாா். வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் சுமதி, விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம், ரங்கநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா் தண்டபாணி, கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நடராஜன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று பேசினா். நிறைவில் துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, பஞ்சநாதன், சுரேஷ், ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க