கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் கூறியது:
இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் 87 வருவாய்க் கிராமங்களிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் வட்டார அளவிலான அலுவலா்கள், சாா்புத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், உழவா்களை கிராமங்களிலேயே சந்தித்து நேரடியாக ஆலோசனை வழங்குவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதனடிப்படையில் இந்த வட்டாரத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.
திட்டத்தை வானூா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கினாா். வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் சுமதி, விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம், ரங்கநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா் தண்டபாணி, கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நடராஜன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று பேசினா். நிறைவில் துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, பஞ்சநாதன், சுரேஷ், ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.