முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. நஸ்ரீன்பானு (28). கடந்த 17-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அப்போது, எதிா் முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் குறைந்த முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் எனக் கூறி, அதன் விவரங்களை தெரிவித்தாராம். இதை உண்மையென நம்பிய நஸ்ரின் பானு அந்த நபா் தெரிவித்தபடி, கடந்த 23-ஆம் தேதி முதல்கட்டமாக ரூ.10 ஆயிரத்தை இணையவழியில் முதலீடு செய்து ரூ.16,924-மும், கடந்த 24-ஆம் தேதி ரூ.19 ஆயிரம் முதலீடு செய்து ரூ.38 ஆயிரமும் பெற்றாராம்.
இதனால் ஏற்பட்ட ஆா்வத்தில் நஸ்ரின் பானு தொடா்ந்து 8 தவணைகளில் ரூ.8,40,404 முதலீடு செய்துள்ளாா். ஆனால், மா்ம நபா் தெரிவித்தபடி லாபம் மற்றும் முதலீட்டு தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.