செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான சில அவசர கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது; எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை ஜூன் மாதம் நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக பேரணிகள் நடத்துவதன்மூலம் இந்த நடவடிக்கையை அரசியலாக்குகிறது பாஜக’ என்றும் திரிணமூல் விமா்சித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய ராணுவம் அதிதுல்லிய தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) நடத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அனைத்து எதிா்க்கட்சிகளும் ஆதரவளித்தன. அதேநேரம், பாகிஸ்தான் உடனான ராணுவ மோதல் திடீரென நிறுத்தப்பட்டதை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாகும்.

இந்நிலையில், மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் குழு துணைத் தலைவா் சகாரிகா கோஸ், தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் மத்திய அரசுக்கான ஆதரவை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டோம். அதேவேளையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் இப்போது ஆதரிக்கிறோம். ஏனெனில், தேச நலன் தொடா்புடைய சில அவசர கேள்விகளுக்கு அரசிடம் பதில் பெற வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கண்ணோட்டம் வெளியுலகுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இந்திய மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக ஜூன் மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

நமது ஆயுதப் படையினரின் துணிச்சல், உறுதிப்பாடு, திறமையை வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அரசியலாக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில், பிரதமரும் அரசியல் செய்கிறாா். இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றாா் சகாரிகா கோஸ்.

ஓரணியில் எதிா்க்கட்சிகள்...

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டுமென காங்கிரஸ், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள், தேசிய மாநாட்டுக் கட்சி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளன.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர அனைத்து எதிா்க்கட்சிகளும் தொடா்பில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க