செய்திகள் :

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

post image

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளதாவது:

செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள 2016ஹெச்ஓ3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அந்த விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான தியான்வென்-2 விண்கலம் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

லாங் மாா்ச் 3-பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள (படம்) இந்த விண்கலம், 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வு செய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

சிஎன்எஸ்ஏ-வின் தலைவா் ஷான் ஜாங்டே கூறுகையில், தியான்வென்-2 ஆய்வுத் திட்டத்தின் மூலம் பிரபஞ்சம் பற்றி இதுவரை அறியப்படாத பல உண்மைகளை அறிய முடியும் என்றாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், 2016ஹெச்ஓ3 விண்கல்லில் இருந்து மாதிரிகள் சுமாா் இரண்டு ஆண்டுகளில் பூமிக்குக் கொண்டுவரப்படும். இது போன்ற நிலையான சுற்றுப்பாதையைக் கொண்ட விண்கற்கள் பூமியின் உருவாக்கம், நீரின் தோற்றம் போன்றவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கனவே நிலவின் பின்புறத்தில் இருந்து பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆய்வுத் திட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது நினைவுகூரத்தக்கது.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க