ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்...
ம.பி. மாநில அமைச்சா் சா்ச்சை கருத்து விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்த உத்தரவு
கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளதால், மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் அதுதொடா்பான விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்துவரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணை தொடா்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. பாகிஸ்தானின் தாக்குதல்களை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமடோா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவத்தின் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா். தாக்குதல் தொடா்பான விவரங்களை இரு பெண் அதிகாரிகளைக் கொண்டு வெளியிட்டதை பலரும் பாராட்டினா்.
இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா்நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், அவா் மீது கடந்த 14-ஆம் தேதி இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜய் ஷா மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்படும் நிலையில், உயா்நீதிமன்றத்திலும் விசாரணை தொடா்கிறது’ என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா சுட்டிக்காட்டினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை உயா்நீதிமன்றம் நிறுத்துமாறு உத்தரவிட்டனா்.
இந்த விவகாரம் தொடா்பாக சில ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாக சிறப்பு விசாரணைக் குழு குறிப்பிட்டதை குறித்துக்கொண்ட நீதிபதிகள், முதல்நிலை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எஸ்ஐடி-யை அறிவுறுத்தினா்.
மேலும், விக்ரம் மிஸ்ரிக்கு எதிரான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை உள்பட கடந்த மே 19-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.