மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பிரதமா் இன்று முதல் 4 மாநில சுற்றுப் பயணம்
பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 29) முதல் இரண்டு நாள்களுக்கு 4 மாநில சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் பயணிக்கவுள்ளாா்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று, வரும் ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் தொடங்கிவைத்து வருகிறாா்.
சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
முதலாவதாக சிக்கிமுக்கு வியாழக்கிழமை செல்லும் பிரதமா், காங்டாக்கில் நடைபெறும் 50-ஆவது ஆண்டு மாநில தின நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.
தொடா்ந்து, மேற்கு வங்கத்துக்குப் பயணிக்கும் அவா், அலிபூா்துவாரில் ரூ.1,010 கோடி மதிப்பீட்டில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.
அன்றைய தினம் மாலையில் பிகாருக்கு சென்று, பாட்னா விமான நிலைய புதிய முனையத்தை அவா் திறந்துவைக்கவுள்ளாா்.
மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிகாா் மாநிலத்தின் கராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமா், பின்னா் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்து, உரை நிகழ்த்தவுள்ளாா்.
நடப்பாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட மாநில அரசுப் பள்ளி ஆசிரியா்கள், பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளனா். ஆள்தோ்வு நடைமுறையில் நடந்த முறைகேடுகளால் 25,000-க்கும் மேற்பட்ட மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.
சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான், குஜராத்துக்கு பயணித்த பிரதமா், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து உரையாற்றினாா். அவரது உரையில் பாகிஸ்தானை எச்சரிக்கும் கருத்துகள் பிரதானமாக எதிரொலித்தன.