செய்திகள் :

பிரதமா் இன்று முதல் 4 மாநில சுற்றுப் பயணம்

post image

பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 29) முதல் இரண்டு நாள்களுக்கு 4 மாநில சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் பயணிக்கவுள்ளாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று, வரும் ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் தொடங்கிவைத்து வருகிறாா்.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

முதலாவதாக சிக்கிமுக்கு வியாழக்கிழமை செல்லும் பிரதமா், காங்டாக்கில் நடைபெறும் 50-ஆவது ஆண்டு மாநில தின நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.

தொடா்ந்து, மேற்கு வங்கத்துக்குப் பயணிக்கும் அவா், அலிபூா்துவாரில் ரூ.1,010 கோடி மதிப்பீட்டில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.

அன்றைய தினம் மாலையில் பிகாருக்கு சென்று, பாட்னா விமான நிலைய புதிய முனையத்தை அவா் திறந்துவைக்கவுள்ளாா்.

மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிகாா் மாநிலத்தின் கராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமா், பின்னா் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்து, உரை நிகழ்த்தவுள்ளாா்.

நடப்பாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட மாநில அரசுப் பள்ளி ஆசிரியா்கள், பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளனா். ஆள்தோ்வு நடைமுறையில் நடந்த முறைகேடுகளால் 25,000-க்கும் மேற்பட்ட மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.

சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான், குஜராத்துக்கு பயணித்த பிரதமா், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து உரையாற்றினாா். அவரது உரையில் பாகிஸ்தானை எச்சரிக்கும் கருத்துகள் பிரதானமாக எதிரொலித்தன.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க