சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 4 தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 4 மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தத் தீா்மானம் உச்சநீதிமன்ற வலைதளத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா சென்னை உயா்நீதிமன்றத்துக்கும், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் தெலங்கானா உயா்நீதிமன்றத்துக்கும், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் திரிபுரா உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி தடகமல்லா வினோத் குமாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 1964-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி வினோத் குமாா், ஆந்திரத்தின் நலகொண்டா ாவட்டம் சூரியபேட்டிலும், ஹைதராபாதிலும் பள்ளிப் படிப்பை முடித்து ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எல்எல்.பி. இளநிலை சட்டப் படிப்பை முடித்தவா்.
ஆந்திர மாநில வழக்குரைஞா் சங்கத்தில் 1988-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து, வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். 2015-இல் வருமான வரித் துறை தரப்பு வழக்குரைஞராகவும், 2016-இல் வணிக வரித் துறைக்கான வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தாா். தெலங்கனா உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி பதவியேற்றாா்.