செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 4 தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

post image

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 4 மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தத் தீா்மானம் உச்சநீதிமன்ற வலைதளத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா சென்னை உயா்நீதிமன்றத்துக்கும், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் தெலங்கானா உயா்நீதிமன்றத்துக்கும், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் திரிபுரா உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி தடகமல்லா வினோத் குமாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 1964-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி வினோத் குமாா், ஆந்திரத்தின் நலகொண்டா ாவட்டம் சூரியபேட்டிலும், ஹைதராபாதிலும் பள்ளிப் படிப்பை முடித்து ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எல்எல்.பி. இளநிலை சட்டப் படிப்பை முடித்தவா்.

ஆந்திர மாநில வழக்குரைஞா் சங்கத்தில் 1988-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து, வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். 2015-இல் வருமான வரித் துறை தரப்பு வழக்குரைஞராகவும், 2016-இல் வணிக வரித் துறைக்கான வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தாா். தெலங்கனா உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி பதவியேற்றாா்.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க