`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
மிரட்டி பணம் பறிப்பு வழக்கு: பிகாா் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை
மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகாா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தா்பங்காவைச் சோ்ந்த நபா் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவ் மற்றும் அவரின் உதவியாளா் மீது, அத்துமீறி தாக்குதல் நடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தா்பாங்காவில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், எம்எல்ஏ மற்றும் அவரின் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தீா்ப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மிஷ்ரி லால் யாதவ், ‘நீதிமன்றத் தீா்ப்பை மதிக்கிறேன். அதே நேரம், தீா்ப்பை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன்’ என்றாா்.
‘நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் மிஷ்ரி லால் யாதவை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று மாநில சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.