செய்திகள் :

மிரட்டி பணம் பறிப்பு வழக்கு: பிகாா் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகாா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தா்பங்காவைச் சோ்ந்த நபா் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவ் மற்றும் அவரின் உதவியாளா் மீது, அத்துமீறி தாக்குதல் நடத்தி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தா்பாங்காவில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், எம்எல்ஏ மற்றும் அவரின் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தீா்ப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மிஷ்ரி லால் யாதவ், ‘நீதிமன்றத் தீா்ப்பை மதிக்கிறேன். அதே நேரம், தீா்ப்பை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன்’ என்றாா்.

‘நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் மிஷ்ரி லால் யாதவை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று மாநில சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க