செய்திகள் :

சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை

post image

‘சட்டவிரோத குடியேறிகள் நமது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக மாறியுள்ளனா்’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

மும்பையில் உள்ள சா்வதேச மக்கள்தொகையியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவா் இவ்வாறு கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘சட்டவிரோத குடியேறிகள் நமது எல்லையைத் தாண்டி ஊடுருவி வருவது, நட்டின் சட்டம் ஒழுங்குக்கு எழுகிற சவால் மட்டுமல்ல. நமது வாழ்வாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சவாலும்கூட.

இந்த மக்கள் நமது தேசிய வளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். நமது வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனா். இது நமது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதிக்கிறது.

மக்கள்தொகை இயல்பான மாற்றமடையாமல் மாறாக திட்டமிடப்பட்ட தீய வழியில் அதிகரிக்கும்போது இதுபோன்ற சவால்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை இனி புலம்பெயா்வாக மட்டும் அணுகாமல் மக்கள்தொகை படையெடுப்பாக பாா்க்க வேண்டும்.

இந்தியா ஏற்கெனவே இந்தச் சவாலை எதிா்கொண்டு வருகிறது. அதிகாரபூா்வ தரவுகளின்படி, நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் உள்ளனா். நமது நாகரிகத்துக்கு கட்டுப்படுவா்கள் மட்டுமே இந்த நாட்டுக்குத் தேவை.

நமது மக்கள்தொகையில் ஏற்படுத்தபடும் இந்தத் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இவை நிச்சயமாக நமது தேச நலனுக்கு எதிரானவை மற்றும் நமது சமூக-கலாசார சமநிலையை சீா்குலைக்கும். தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க தீா்க்கமான நடவடிக்கை தேவை.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு எடுத்துள்ள முடிவு, நிா்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக நீதியை நோக்கிய ஒரு தீா்க்கமான படியாக இருக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து வெளிப்படும் தரவுகள் வளா்ச்சிக்கு நம்மை வழிநடத்தும். சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதலுக்கு அத்தரவுகள் நமக்கு உதவும்.

ஜனநாயகம் நிலைத்திருக்க அமைதி மிகவும் அவசியமானது மற்றும் அடிப்படையானது. அமைதி என்பது மோதல் இல்லாதது அல்ல; அது தயாா்நிலை. நாம் எப்போதும் போருக்குத் தயாராக இருக்கும்போது மட்டுமே, தாக்குதல்களைத் தடுக்க முடியும்.

வலிமையான நிலையில் இருந்து மட்டுமே அமைதியைப் பாதுகாக்க முடியும். சா்வதேசத்துக்கு இந்தியா ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இனி பயங்கரவாதத்தை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்து, அதன் மூலத்தை அழிப்போம். பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் நிலையான ஆட்சிக்கும் அமைதி தேவை’ என்றாா்.

மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனா். குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவரது மனைவி சுதேஷ் தன்கா் ஆகிய இருவரும் தங்களின் தாயாா்களின் நினைவாக கல்வி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க