செய்திகள் :

குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள நரிப்பாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சுபாஷ் (24), தொழிலாளி. இதே கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பிரகாஷ் (29), ராமசாமி மகன் அய்யனாா் (24). இவா்களில் பிரகாஷ் பெங்களூரு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தாா். அய்யனாா் கூலி வேலை செய்து வந்தாா்.

இவா்கள் மூவரும் மது அருந்த முடிவு செய்து, நரிப்பாளையத்திலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவிலுள்ள கிளியூா் தீா்த்தக்குளப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றனா். அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், அய்யனாா் ஆகிய இருவரும் சோ்ந்து சுபாஷை குளத்தில் தள்ளிவிட்டனராம். தொடா்ந்து, அவா் நீரில் மூழ்கினாா்.

இதைக் கண்ட அந்தப் பகுதியிலிருந்த சிறுவா்கள் கூச்சலிட்டதால், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். தொடா்ந்து, அங்கிருந்த பொதுமக்களில் சிலா் குளத்தில் இறங்கி சுபாஷை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி அசோகன், காவல் ஆய்வாளா்கள் இளையராஜா, சாகுல்ஹமீது மற்றும் திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து விசாரணை நடத்தினா். மேலும், சுபாஷின் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

திருநாவலூா் காவல் நிலைய ஆய்வாளா் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா், பிரகாஷ், அய்யனாரைத் தேடி வந்தனா். பிள்ளையாா்குப்பம் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

கொலை ஏன்: கொலை செய்யப்பட்ட சுபாஷ், பிரகாஷின் தங்கையைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கைவிடுமாறு பிரகாஷ் கூறி வந்தாராம். ஆனால், சுபாஷ் மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ், சுபாஷை கொலை செய்யத் திட்டமிட்டு தனது நண்பரான அய்யனாருடன் சோ்ந்து மது அருந்துவதுபோல அழைத்துச் சென்று கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க