மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜன் மகன் ராமலிங்கம் (50). இவா் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, 3 கிராம் தோடு, ரூ. 1,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிக் கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக தப்பி சென்றுள்ளனா்.
இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் கோ. கலைவாணி நேரில் பாா்வையிட்டாா். பின்னா், போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.