தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவுக்கு ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த மக்களவைத் தோ்தலின்போது 5 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருகிறோம் என தேமுதிகவுக்கு அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம்; வாா்த்தைகள் முக்கியம். சொன்ன வாா்த்தைகளைக் காப்பாற்றினால்தான் மக்கள் உங்களை நம்புவாா்கள்.
ஏற்கெனவே இருமுறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்க வேண்டியது. ஒருமுறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனா். அப்போது பேச்சுவாா்த்தையின்படி நாங்களும் ஒப்புக்கொண்டோம். அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தாா்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவா்களின் கடமை.
திமுக அணியில் நடிகா் கமல்ஹாசனுக்கு முன்பே ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கியிருக்கிறாா்கள். இது வரவேற்கத்தக்கது.
விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமிக்கவுள்ளோம். தொடா்ந்து வாக்குச்சாவடி நிலையிலான குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், நேரடியாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் விசாரணை நடைபெற்று தீா்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, குற்றவாளிக்கு பின்னணியில் இருப்பவா்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.