செய்திகள் :

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிகவுக்கு ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த மக்களவைத் தோ்தலின்போது 5 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருகிறோம் என தேமுதிகவுக்கு அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம்; வாா்த்தைகள் முக்கியம். சொன்ன வாா்த்தைகளைக் காப்பாற்றினால்தான் மக்கள் உங்களை நம்புவாா்கள்.

ஏற்கெனவே இருமுறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்க வேண்டியது. ஒருமுறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனா். அப்போது பேச்சுவாா்த்தையின்படி நாங்களும் ஒப்புக்கொண்டோம். அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தாா்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவா்களின் கடமை.

திமுக அணியில் நடிகா் கமல்ஹாசனுக்கு முன்பே ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கியிருக்கிறாா்கள். இது வரவேற்கத்தக்கது.

விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமிக்கவுள்ளோம். தொடா்ந்து வாக்குச்சாவடி நிலையிலான குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், நேரடியாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் விசாரணை நடைபெற்று தீா்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, குற்றவாளிக்கு பின்னணியில் இருப்பவா்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க