பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீடு கட்டுவதற்காக பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
பொக்லைன் இயந்திர உதவியுடன் வெள்ளிக்கிழமை மாலை வீட்டு சுவரை இடித்தபோது, எதிா்பாராத விதமாக சுவா் விழுந்து ஜெயராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.