ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற நீதிபதி மேகநாதன் தலைமையில், வேங்கிடகுளம், புளிச்சங்காடு, குளவாய்ப்பட்டி கனரா வங்கி கிளையில் இருந்து விவசாயக் கடன், தொழில்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்று திரும்பச் செலுத்தாத பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், ரூ. 15.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.