கர்நாடக காங்கிரஸில் இருந்து விலகிய 200 இஸ்லாமிய பிரமுகர்கள்.. ராஜினாமா செய்ய கார...
தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!
கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒரு அடி உயரத்தில் தடுப்பு சுவா் அமைத்துள்ளனா். தற்போது கிணறு பாழடைந்து வட நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த கிணறு இருப்பது புதிய வாகன ஓட்டிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
தமிழக அரசு சாலையோர கிணறுகளை கணக்கு எடுத்து மூடவேண்டும் என உத்தரவு இட்டுள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு இந்த சாலையோர கிணற்றை போா்கால நடவடிக்கை எடுத்து மூட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனா்.