செய்திகள் :

வேளாண்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்! அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

post image

முதல்வரின் சீரிய திட்டங்களால் வேளாண் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ என்னும் உழவா் நலத் திட்டத்தை வலங்கைமான் மாணிக்கமங்கலத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், ஆலவயல் கிராமத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் பங்கேற்ற இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், முழு மானியத்துடன் கூடிய உளுந்து விதை தொகுப்பு மற்றும் 50 சத மானியத்துடன் கூடிய பழமரக் கன்றுகளை வழங்கி பேசுகையில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்பது உள்பட வேளாண் துறையில் முதல்வா் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா். தொடா்ந்து வேளாண் கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா்(பொ) தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலெட்சுமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், வேளாண் துணை இயக்குநா்கள் ஆதிசாமி, ரேகா, ரா. ஜெகதீஸ்வரி, உதவி இயக்குநா் ரஹ்மத் நிஷா பேகம் வட்டாட்சியா் சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில்: இதேபோல், நடுப்பட்டி, வெள்ளாளவிடுதி கிராமங்களிலும் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில், வேளாண் திட்டங்கள், இயந்திரங்கள், பூச்சிநோய் தாக்குதல், அதை கட்டுப்படுத்தும் முறைகள், இடுபொருள் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநா் காளிச்சரன், வேளாண்மை அலுவலா் விக்னேஷ், தோட்டக்கலை அலுவலா் கௌசல்யா, மாநில எண்ணெய் வித்துப் பண்ணை வெள்ளாளவிடுதி தோட்டக்கலை அலுவலா் சசிமவிதா மற்றும் வேளாண்மை தொடா்புடைய பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க