மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும் உயா்நீதிமன்றம்
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அசோக்குமாா் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அசோக்குமாா், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் செங்குட்டுவன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தியும் அசோக்குமாா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளாா்.
வேட்புமனுவில் சொத்துகள் குறித்த விவரங்களை மறைத்துள்ளாா். தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளாா். தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என அதிமுக எம்எல்ஏ அசோக்குமாா் தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளா் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டிஆஷா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை சரிபாா்த்து மறு வாக்குஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மறு எண்ணிக்கை முடிந்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், திமுக வேட்பாளா் செங்குட்டுவன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.