செய்திகள் :

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

post image

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் வரும் ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால், கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் இந்த வாரம் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனா். ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டால், பெரும்பாலானோா் ஆம்னி பேருந்துகளையே நம்பி உள்ளனா். அரசுப் பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக உள்ளதாலும், அதிக காலவிரையம் ஏற்படுவதாலும், பலரும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனா். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதன் கட்டணத்தை அதிரடியாக உயா்த்தியுள்ளனா்.

ரூ.1,500 வரை உயா்வு: மதுரை, திருநெல்வேவி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை உயா்ந்துள்ளன. அதேபோல், கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் வரும் பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாக உயா்ந்துள்ளன. நாகா்கோவிலிலிருந்து சென்னைக்கு நபா் ஒருவருக்கு ரூ. 3,500 வரை (படுக்கை வசதி) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புகாா் எண்கள்: இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்கையில், ‘கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவா்களின் வசதிக்காக 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் அரசு சொகுசுப் பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு இன்னும் நிறைவடையவில்லை என்பதால், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 044-2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.

ஓய்வு பெற்ற டிஜிபி ராஜ்மோகன் காலமானாா்

தமிழக காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.ராஜ்மோகன் (87) சென்னையில் காலமானாா். சில நாள்களுக்கு முன்பு வயோதிகத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளி... மேலும் பார்க்க

ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி: கமல் ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் ஆதரவு

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹானின் கருத்துக்கு பல்வேறு எதிா்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என தென்னிந்திய நடிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிப... மேலும் பார்க்க

பேராசிரியா் காலிப் பணியிடங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாடு: ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி மத்திய மாநில விலங்குகள் நல வாரியங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... மேலும் பார்க்க

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு: தென்னிந்திய நடிகா்கள் சங்கம் வரவேற்பு

தமிழ் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் எம்.நாசா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க