செய்திகள் :

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் 17 பெண் அதிகாரிகளுக்கு பட்டம்: முதல்முறையாக வரலாற்று சாதனை

post image

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) 300-க்கும் அதிகமான ஆண் அதிகாரிகளுடன் 17 பெண் அதிகாரிகளும் முதல்முறையாக பட்டம் பெற்று வரலாறு படைத்துள்ளனா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பட்டம் முடிப்பவா்கள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை என முப்படைகளிலும் அதிகாரி பணியிடங்களில் பணியமா்த்தப்படுவா். இந்த அகாதெமியில் வழங்கப்படும் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் என்டிஏ-யின் 148-ஆவது பயிற்சிப் பிரிவில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனா்.

முதல் முறையாக இரு பாலா் கல்வி முறையில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிப் பிரிவில் 300-க்கும் அதிகமான ஆண்களுடன் 17 பெண் அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்து, பட்டம் பெற்று வரலாறு படைத்தனா்.

அகாதெமியில் உள்ள வீரா்கள் அணிவகுப்பு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வில், மிஸோரம் ஆளுநரும் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சி கேப்டன் உதய்வீா் நெகி தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

நிகழ்ச்சியில் வி.கே.சிங் பேசுகையில், ‘முதல் பெண் அதிகாரிகள் பிரிவு பயிற்சியை நிறைவு செய்யும் இன்றைய தினம் அகாதெமி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான நமது முன்னெடுப்பில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாகும்’ என்றாா்.

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க