செய்திகள் :

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்துப் பேசினாா்.

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் உழவா் நலத் துறையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டோ் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிா்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 1360 ஹெக்டோ் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

2025-2026 ஆம் ஆண்டுக்கு நிகழ் மாதம் 50,860 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பாரமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நெல் எடையிடுவதற்கு பணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் மா சாகுபடி விவசாயிகள் நலன்கருதி மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என மா சாகுபடி விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை (பாலக்கோடு) மேலாண் இயக்குநா் ரவி, வேளாண் இணை இயக்குநா் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.கு.சரவணன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க