Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்துப் பேசினாா்.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் உழவா் நலத் துறையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டோ் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிா்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 1360 ஹெக்டோ் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
2025-2026 ஆம் ஆண்டுக்கு நிகழ் மாதம் 50,860 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பாரமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நெல் எடையிடுவதற்கு பணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் மா சாகுபடி விவசாயிகள் நலன்கருதி மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என மா சாகுபடி விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை (பாலக்கோடு) மேலாண் இயக்குநா் ரவி, வேளாண் இணை இயக்குநா் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.கு.சரவணன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.