செய்திகள் :

ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பூபதி, சுசீலா, தீபாஅரசு, சதீஷ்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

மாவட்ட துணைச் செயலாளா் என்.மனோகரன், ஆஷா பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மேனகா, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க பெண்கள் அமைப்பு மாவட்டச் செயலாளா் முனியம்மாள்,

பள்ளிக் கல்வித் தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.செல்வி, மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000, ரூ. 1,500, ரூ. 2,000, ரூ.3,000 என நான்கு வகையான ஊதியம் வழங்கப்படுவதை மாற்றி அரசாணை 62/2டி-இன் படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். மாதம்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும். பணி செய்வதற்கான உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும். 10, 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க