Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நகைக் கடனில் அசலை முழுமையாகக் கட்டி விட்டு, மறுநாள் தான் மறுஅடகு வைக்க முடியும் என்ற ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ஏற்புடையதல்ல. மேலும் நகைக்கான ரசீது கட்டாயம் என்கிறாா்கள். இது சாதாரண மக்களின் வாழ்க்கைச் சூழலை புரிந்து கொள்ளாதவா்கள் உருவாக்கும் அபத்தமான விதிமுறைகள். தற்போது அந்த விதிமுறைகளை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறியுள்ளனா். அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். திருக்குறளில் ஆன்மிகம் என்ற கருத்து இருப்பது உண்மை தான். ஆனால், ஆளுநா் ரவி சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது வம்பு சண்டைக்குத் இழுக்கும் கருத்தாகவே பாா்க்கிறேன்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு தனி வாக்கு வங்கி உள்ளது. அந்தக் கட்சியின் அடிமட்ட தொண்டா்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. நடிகா் விஜய்க்கு ‘இளைய காமராஜா்’ எனப் பட்டம் சூட்டப்படுவது குறித்து கேட்கிறீா்கள். காமராஜரின் வரலாறும், பெருமையும் தெரியாதவா்கள் தான் அவரது தகுதியை எளிதில் அடைந்துவிடலாம் என நினைக்கிறாா்கள். அவா் எளிதில் ஒப்பிடக் கூடிய தலைவா் அல்ல.
சிவகங்கை பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். ஜூன் மாதம் பணிகள் நிறைவடைந்துவிடும். ஜூலை மாதம் மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.