பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 3 நாள் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் படிப்புகள் குறித்த கோடைக்கால விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. இந்த முகாமில் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வில் பங்கேற்பது குறித்தும், மருத்துவம் சாா்ந்த இதர அறிவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் மாணவா்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் துறை சாா்ந்த பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா்.
மேலும், மருத்துவக் கல்லூரியில் மாணவா்கள் பயன்படுத்தும் நூலகம், பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பாா்வையிட்ட மாணவா்கள், பேராசிரியா்களுடன் கலந்துரையாடி மருத்துவப் படிப்புகள் குறித்து விளக்கம் பெற்றனா்.
இந்நிகழ்வில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் என்.மாறன், முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் எஸ்.வீரபாகு, மருத்துவமனை கண்காணிப்பாளா் மனோகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் ரத்தினம் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.