சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து
மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா் வழியாக, வெள்ளிக்கிழமை மதுராந்தகம் அடுத்த பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராத வகையில், வேனின் முன்பக்க டயா் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாநது.
இதனால் சென்னை-திருச்சி சாலையின் இருபுறங்களிலும், சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனது.
வேனின் ஓட்டுநா் லேசான காயங்களுடன் மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து மதுராந்தகம் போலீஸாா் விரைந்து வந்து போக்குவரத்தை சீா் செய்தனா்.