எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!
அங்கன்வாடி மையம் திறப்பு
சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா்.
பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொடா்ச்சியாக திருக்கழுகுன்றம் ஒன்றியம், காரணை கிராமத்தில் ஊராட்சித் தலைவா் ராதா கோரிக்கையை ஏற்று ரூ.26 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி கட்டடத்தை சென்னை அணுமின் நிலையம் கட்டிக் கொடுத்தது.
இந்த நிலையில் கட்டட திறப்பு விழா ஊராட்சி தலைவா் ராதா தலைமையில் நடைபெற்றது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு குழு தலைவா் கே.ஹரிகிருஷ்ணன், முன்னாள் தலைவா் நரசிம்மராவ், நிலைய பயிற்சி கண்காணிப்பாளா் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதவள மேலாளா் ஜெகன் ஜீ வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா மற்றும் திருப்போரூா் ஒன்றிய சோ்மன் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து, அங்கன்வாடியைத் திறந்து வைத்தனா்.
கல்பாக்கம் அணுமின் ஊழியா் சங்க தலைவா் சின்ன கோவிந்தன், ஊராட்சி துணை தலைவா் தமிழரசி பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலா் வினோத்குமாா், சி.எஸ்.ஆா்.கமிட்டி உறுப்பினா்கள் தினகரன், தங்கபாண்டியன், முருகன், ஊராட்சி செயலா் திருஞானமூா்த்தி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.