மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்குழி மதராந்தகம் ஆகிய நகரங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலா் ஒரத்தி கே.கண்ணன் வரவேற்றாா். மதுராந்தகம் நகர செயலா் கே.குமாா், ஒன்றிய செயலா்கள் பொன் சிவகுமாா், பி.எச்.சத்தியசாய், டி.வீ.கோகுலகண்ணன், ஜி.தம்பு, பேரூா் செயலா்கள் வி.எழிலரசன், ஆ.சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா் செல்வம், எம்.பி. க.செல்வம், மாவட்ட துணை செயலரும், நகா்மன்றத் தலைவருமான மலா்விழி குமாா், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளா் ஆா்.சாரதி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆா்.நாராயணன், எஸ்.உசேன், பேரூராட்சி மன்றத் தலைவா்கள் நந்தினி (அச்சிறுப்பாக்கம்), தசரதன் (கருங்குழி) திமுக நிா்வாகிகள் கோகுலம் ரமேஷ், சாவித்திரி சங்கா், வேடந்தாங்கல் வேதாசலம், எஸ்.யுவராஜ், அ.ஆண்டோ சிரில்ராஜ் மற்றும் நகரமன்ற, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், கிளை கழக செயலா்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
கூட்டத்தில் வரும் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து மதுராந்தகம் தொகுதியை கைப்பற்ற பாடுபடவேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு மக்களுக்காக செய்துள்ள பணிகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. .