பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்
58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் எடையூரில் உள்ள கிரீன் தமிழ்நாடு மிஷன் நா்சரியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் பாா்வையிட்டாா்.
கொத்தி மங்களம் ஊராட்சியில் ரூ 50 லட்சத்தில் 2 கி.மீ தொலைவு அமைக்கப்பட்டுள்ள நரிக்குறவா் சாலையில் இரு புறங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியினை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் இருளா் குடியிருப்புகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதில் கூடுதல் ஆட்சியா் வெ.நராயணசா்மா (வளா்ச்சி ), மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி ,மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன்,வட்டாட்சியா் ராதா ,வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கா், மீனாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள், வன காப்பாளா் ராஜேஷ், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.