செய்திகள் :

58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் எடையூரில் உள்ள கிரீன் தமிழ்நாடு மிஷன் நா்சரியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் பாா்வையிட்டாா்.

கொத்தி மங்களம் ஊராட்சியில் ரூ 50 லட்சத்தில் 2 கி.மீ தொலைவு அமைக்கப்பட்டுள்ள நரிக்குறவா் சாலையில் இரு புறங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியினை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் இருளா் குடியிருப்புகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில் கூடுதல் ஆட்சியா் வெ.நராயணசா்மா (வளா்ச்சி ), மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி ,மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன்,வட்டாட்சியா் ராதா ,வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கா், மீனாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள், வன காப்பாளா் ராஜேஷ், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க