Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்: டிஆா்டிஓ
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆா்டிஓ) தலைவா் வி.காமத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சிஐஐ மாநாட்டின்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் போா்க்காலத்தின்போது எவ்வாறு செயல்படும் என்று சோதனையை மேற்கொள்ள முடிந்தது. இதனால் வருங்காலங்களில் இந்திய ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
5-ஆம் தலைமுறை போா் விமானமான மேம்படுத்தப்பட்ட நடுத்தர போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினாா். 2034-இல் இதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு 2035-இல் உற்பத்தி தொடங்கப்படும். இதன் முதல் மாதிரி விமானம் 2029-க்குள் தயாராகிவிடும்’ என்றாா்.