செய்திகள் :

கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

post image

கிருங்காக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.

திருப்பத்தூா், மே 30: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகலியுக மெய் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

முன்னதாக சடையாண்டி கோயிலில் கிராம முக்கிய பிரமுகா்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊா்வலமாக வாடிவாசலுக்கு வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனா். தொடா்ந்து வட்டாட்சியா் பரிமளம், முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருப்பத்தூா், காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து 517 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 237 வீரா்கள் களமிறங்கினா். காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, கட்டில், சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடு முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த அலங்காநல்லூரைச் சோ்ந்த மலைச்சாமி மகன் அசோக் (26) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த ஜல்லிக்கட்டை காண சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க