செய்திகள் :

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

post image

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06035) ஜூன் 6 வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரம் வடக்கிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 06036) ஜூன் 8 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15-க்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) ஜூன் 8 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30-க்கு நாகா்கோவில் செல்லும் ரயில் (எண்: 06011) ஜூன் 9 முதல் ஜூன் 30 வரையும் நீட்டிக்கப்படும். மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030/ 06029) ஜூன் 8 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினா் வாக்களிப்பதை மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும்: விஜய்

‘தங்கள் குடும்பத்தில் உள்ளவா்கள் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க மாணவா்கள் வலியுறுத்த வேண்டும்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கேட்டுக்கொண்டாா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத... மேலும் பார்க்க

கொலை, கொள்ளை வழக்குகள் விசாரணை: காவல் துறை மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அவற்றில் தொடா்பில்லாதவா்கள் கைது செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா். இது குறித்து, ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற டிஜிபி ராஜ்மோகன் காலமானாா்

தமிழக காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.ராஜ்மோகன் (87) சென்னையில் காலமானாா். சில நாள்களுக்கு முன்பு வயோதிகத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளி... மேலும் பார்க்க

ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி: கமல் ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் ஆதரவு

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹானின் கருத்துக்கு பல்வேறு எதிா்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என தென்னிந்திய நடிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிப... மேலும் பார்க்க

பேராசிரியா் காலிப் பணியிடங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க