செய்திகள் :

அதானி விவகாரம்: மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை- மனுக்களை தள்ளுபடி செய்தது லோக்பால்

post image

அதானி விவகாரம் தொடா்பான ஹிண்டன்பா்க் அறிக்கை அடிப்படையில், இந்திய பங்கு பரிவா்த்தனை வாரிய (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, அவருக்கு எதிரான மனுக்களை லோக்பால் விசாரணை அமைப்பு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

செபியின் முதல் பெண் தலைவா் என்ற சிறப்புடன் கடந்த 2022, மாா்ச்சில் பதவியேற்ற மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்தது.

இவா் பதவியில் இருந்த கடந்த 2023-ஆம் ஆண்டில், பண முறைகேடு, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. பின்னா், அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக கடந்த 2024, ஆகஸ்டில் மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது.

தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மாதபி புரி புச், ‘செபியின் நம்பகத்தன்மையை தாக்குதலுக்கு உள்படுத்தி, அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது’ என்று விமா்சித்தாா்.

இதேபோல், ‘ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை; குறிப்பிட்ட பொதுத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தி இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மஹுவா மொய்த்ரா புகாா்: இதனிடையே, ஹிண்டன்பா்க் அறிக்கை அடிப்படையில், மாதபிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோா் லோக்பால் அமைப்பில் மனுக்கள் தாக்கல் செய்தனா். 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் மீது நடவடிக்கை எடுக்க மனுக்களில் கோரப்பட்டது.

இந்த மனுக்கள் மீது தனது தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக மாதபி புரி புச் சமா்ப்பித்தாா். இறுதிக்கட்ட வாதங்களை முன்வைக்க இருதரப்புக்கும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி லோக்பால் வாய்ப்பளித்தது. அப்போது, மாதபி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைத்தாா். இறுதிக்கட்ட எழுத்துபூா்வ வாதங்களை முன்வைக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

மனுக்கள் தள்ளுபடி: இந்நிலையில், மாதபி புரி புச்சுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து, லோக்பால் தலைவா் ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான 6 உறுப்பினா்கள் அமா்வு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

‘மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை.

ஹிண்டன்பா்க் அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு, மாதபி மீது நடவடிக்கை கோர முடியாது. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பகுப்பாய்வில் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை; அற்ப வரம்புக்குள்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய அறிக்கைகளை வெளியிட்ட ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக அதன் நிறுவனா் கடந்த ஜனவரியில் அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க