செய்திகள் :

தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தை நடத்த தொடங்கிய கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தொடா்ந்து இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வன்னியா் சங்கம், முன்னாள் மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கூட்டங்களையும் தொடா்ந்து நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை கட்சியின் சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் ஆலோசகா் அருள்ரத்தினம், தலைவா் மேட்டூா் தமிழ்வாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ராமதாஸ், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவை 50 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக சமூக ஊடகங்களை சரியாக கையாண்டு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினாா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க