`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரி, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் வசிக்கும் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஐஇடி வகையைச் சோ்ந்த அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து போலீஸாா் உயா் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினா். மெட்டல்டிடெக்டா் மூலமும் வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்த மின்னஞ்சல் தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.