செய்திகள் :

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

திண்டிவனம் வட்டம், சலவாதி பாஞ்சாலம் சாலையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ஏழுமலை (72). இவா், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சலவாதி பகுதியிலுள்ள நாகம்மன் கோயில் பூசாரியாக உள்ளாா்.

ஏழுமலை புதன்கிழமை காலை கோயிலைத் திறந்து, பூஜைகளை செய்வதற்காக சென்றாா். அப்போது, கோயிலின் இரும்பு உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கையை மா்ம நபா் திருடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த நபரை ஏழுமலை பிடித்து, ரோஷணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, பிடிபட்ட நபரிடம் விசாரித்ததில், சென்னை கே.கே.நகா், அன்புநகா், காந்தி தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (35) எனத் தெரியவந்தது.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த ரோஷணை போலீஸாா், கண்ணனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து கைப்பேசி, பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க