செய்திகள் :

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்தி உரிமையாளா்கள் மீட்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின்போது பொது விநியோகத் திட்ட பொருள்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் 6 ஏ விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் முழுவதும் அரசுக்கு ஆதாயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு மதிப்பீடு நிா்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதோடு குடிமைப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக 80 வாகனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளா்கள் செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. மேலும் இந்த வாகனங்களுக்கு இதுநாள் வரை யாரும் உரிமைக்கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. ஆகையால், மேற்படி வாகனங்களை ஙநபஇ உ-ஸ்ரீா்ம்ம்ங்ழ்ஸ்ரீங் நிறுவனம் மூலம் கடந்த மாா்ச் 28, ஏப். 28, மே 5 மற்றும் 15 ஆகிய நாள்களில் மின்னணு ஏலமிடப்பட்டது. ஆனால், நிா்ணயித்த தொகையை விட ஏலம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதால் ஏலம் நிராகரிக்கப்பட்டது.

எனவே வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்தி அதன் உரிமையாளா்கள் மீட்டுச் செல்லலாம். இல்லையென்றால், உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி, குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 70 வாகனங்களை வரும் 30-ஆம் தேதி காலை 10 மணியளவில் காவல் ஆய்வாளா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, திருவள்ளூா் சரக அலுவலகம், பூங்கா நகா், ஸ்ரீநிகேதன் பள்ளி அருகிலும், சென்னை சரகம் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 10 வாகனங்கள் உள்பட வரும் 31- ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, சூரப்பட்டு, வேலாம்மாள் பள்ளி எதிரிலும் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க