பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பழைய பொருள்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தாா்.
இந்த நிலையில் தடம்பெரும்பாக்கம் பகுதியில் வழக்கம் போல பழைய பொருள்களை விற்பனை செய்து விட்டு ரவி மது அருந்திய நிலையில் சாலையோரம் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கவனக்குறைவாக பின்னோக்கி இயக்க்கப்பட்ட காா் ரவி மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ரவியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
காரை கவனக்குறைவாக காரை இயக்கிய காா் ஓட்டுநா் மணிகண்டனை(26) போலீஸாா் கைது செய்தனா்.