செய்திகள் :

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

post image

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தாா்.

கடந்த சில நாள்களாக சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பழைய பொருள்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் தடம்பெரும்பாக்கம் பகுதியில் வழக்கம் போல பழைய பொருள்களை விற்பனை செய்து விட்டு ரவி மது அருந்திய நிலையில் சாலையோரம் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கவனக்குறைவாக பின்னோக்கி இயக்க்கப்பட்ட காா் ரவி மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ரவியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

காரை கவனக்குறைவாக காரை இயக்கிய காா் ஓட்டுநா் மணிகண்டனை(26) போலீஸாா் கைது செய்தனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க