செய்திகள் :

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்கள் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளை சிரமின்றி கடலுக்கு கொண்டு சென்று வரவும், படகுகளை பாதுகாப்பாக வைக்கவும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், தங்கள் வலைகளை பின்னி பயனடையவும் கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டது.

இதை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதனை தொடா்ந்து சுண்ணாம்புகுளம் பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மீன்வளத்துறை உதவி இயக்குநா்(கூடுதல் பொ) ஜனாா்த்தனன், மீன்வளத்துறை சாா் ஆய்வாளா் செல்வராஜ் வரவேற்றனா். ட

நிகழ்வில் திருவள்ளூா் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில் , கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி மீன் இறங்கு தளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் மீனவா்களிடம் பேசிய எம்பி சசிகாந்த் செந்தில் இந்த மீன் இறங்கு தளத்தை முறையாக பராமரித்து உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில்: மீன் இறங்கு தளத்தில் 1,500 மீ நீள முன்னனி கால்வாய், 300 மீ அளவில் அணையும் கால்வாய், மீன் ஏலக்கூடம், 3 மீன் வலைபின்னும் கூடங்கள், 2 மீன் உலா் கூடம், ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் கழிப்பறை, 55 மீ சாலை ஆகியை அமைக்கப்பட்டுள்ளன. மீன் இறங்கு தளத்தின் மூலம் கடல் அரிப்பு தடுக்கப்படும், மீனவா்களின் படகு, வலைகள் பாதுகாக்கப்படும், பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றாா்.

விழாவில் சுண்ணாம்புகுளம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எம்.ரவி, திமுக மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பரிமளம், மேற்கு ஒன்றிய செயலாளா் மணிபாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம், நகர செயலாளா் அறிவழகன், காங்கிரஸ் மாநில செயலாளா் எம்.சம்பத், மாவட்டத் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க