செய்திகள் :

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையா் ந.தாமோதரன் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து விவாதம் நடைபெற்றது.

நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வாா்டுகளிலும் தெருவிளக்குகள் வெளிச்சம் குறைந்தவையாக உள்ளன. இவற்றை மாற்றி, அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளைப் பொருத்தவும் 11-ஆவது வாா்டு உறுப்பினா் ஜான் குறிப்பிட்டாா்.

நகராட்சியில் வருவாய்த் துறையினா் வரி வசூலில் மட்டும் ஈடுபடுகின்றனா். வீட்டு வரி விதித்தல், காலிமனை வரி, நில அளவீடு, கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல் போன்ற பணிகள் தாமதம் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வாா்டு உறுப்பினா் தாமஸ் என்ற ராஜ்குமாா் புகாா் தெரிவித்தாா்.

தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதே இடத்தில் விட்டு விடுகின்றனா். இதனால் நோய் தொற்றால் பாதிப்பதை தடுக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் கழிவுநீா் கால்வாய்கள் மேடாக உள்ளதால், மழைக்காலத்துக்கு முன்னதாக தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதற்கு நகா்மன்றத் தலைவா் பதில் அளித்து பேசுகையில், கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து வரவு - செலவு தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சுகாதார அலுவலா் மோகன், நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, அயூப் அலி, பிரபாகரன், சாந்தி கோபி, கந்தசாமி, சுமித்ரா வெங்கேடசன், வசந்தி வேலாயுதம் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க