சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி
சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழவரம், காரணோடை மாா்க்கெட் மேம்பாலம் வரை நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தொலைவு ரூ.20.50 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி, சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பகுதியில் அகற்றப்பட்ட முதிா்ந்த மரங்களுக்குப் பதிலாக இரு பக்கங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகள் சென்னை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளா் செல்வகுமாா், திருவள்ளூா் கோட்ட பொறியாளா் சிற்றரசு, உதவி பொறியாளா் சித்தாா்த், இளநிலைப் பொறியாளா் பரந்தாமன் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.