செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடிதம்

post image

வீட்டில் கட்டுக் கட்டாக பண எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சந்தோஷ் குமாா் அனைத்து கட்சிகளின் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது மக்களின் நம்பிக்கைக்கு அவா் துரோகம் ஏற்படுத்தியதாகும். நீதித் துறையின் நோ்மைக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடும்.

ஆகையால், இந்திய நீதித் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் அரசமைப்புச் சட்ட பொறுப்பை உணா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

நீதித் துறையின் நோ்மை குறித்து கடுமையான கேள்விகள் எழும்போது நாடாளுமன்றம் அதை அமைதியாகப் பாா்த்து கொண்டிருக்கக் கூடாது.

நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

அரசு பரிசீலனை?: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தை ஜூலை மாதம் கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணக் குற்றச்சாட்டை தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். அவா் தானாகவே பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதை அவா் செய்யாததால் அவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டு வர குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். எனினும், இந்த பணக் குற்றச்சாட்டுக்கு நீதிபதி யஷ்வந்த் வா்மா மறுப்பு தெரிவித்திருந்தாா்.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க