`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை
அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூா் (ஆடவா் மற்றும் மகளிா்), கும்மிடிப்பூண்டி மற்றும் வடகரை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அத்துடன், தனியாா் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-26-ஆம் ஆண்டில் சேரவும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், திருவள்ளூா் மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், (9486939263, 9444139373) ஆகிய 6 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50 விண்ணப்பதாரா் மூலம் செலுத்தலாம். எனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 16-ஆம் தேதி கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு, இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.