செய்திகள் :

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

post image

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூா் (ஆடவா் மற்றும் மகளிா்), கும்மிடிப்பூண்டி மற்றும் வடகரை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அத்துடன், தனியாா் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-26-ஆம் ஆண்டில் சேரவும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், திருவள்ளூா் மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், (9486939263, 9444139373) ஆகிய 6 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50 விண்ணப்பதாரா் மூலம் செலுத்தலாம். எனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 16-ஆம் தேதி கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு, இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க