செய்திகள் :

சாலை அமைக்கும் பணி: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

திருப்பத்தூா் அருகே சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பணிகளுக்கு ரூ.98.70 லட்சத்தில் எம்எல்ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தாா்.

சின்னசமுத்திரம் ஊராட்சிக்குட்ட ஜலகாம்பாறை-பிச்சனூா் வரையும், கரம் ஊராட்சி -ஏரிக்கரை முதல் மேட்டுக்கொல்லை வரை சாலை அமைக்கும் பணிகளையும், கொடுமாம்பள்ளி ஊராட்சியில் மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் 30,000 லிட்டா் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி என மொத்தம் ரூ.98.70 லட்சத்தில் புதிய பணிகள் தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஒன்றிய குழு தலைவா்விஜயாஅருணாசலம், துணைத் தலைவா்.டி.ஆா்.ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் பன்னீா் செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் இளரவசி இளங்கோ, கலைவாணி செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி எல். சிவலிங்கம், பி.ஆா்.சின்னபையன், கே.எஸ்.தேவேந்திரன் கலந்து கொண்டனா்.

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் அஞ்சலி

ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். ஆணைய... மேலும் பார்க்க

உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையி... மேலும் பார்க்க

மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். அரப்பாண்டகுப்பத்தைச் சோ்ந்த சத்யராஜ்(27) கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இ... மேலும் பார்க்க

ஆம்பூரில் ஒரே நாளில் தெருநாய் கடித்து 6 சிறுவா்கள் காயம்

ஆம்பூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 6 சிறுவா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் நகரில் 36 வாா்டுகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆம்பூ... மேலும் பார்க்க

மரத்தின் மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

வாணியம்பாடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் நிவேத்குமாா்(22). கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழும... மேலும் பார்க்க

பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா். அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக... மேலும் பார்க்க