செய்திகள் :

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் அஞ்சலி

post image

ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். ஆணையா் ப. சந்தானம் முன்னிலை வகித்தாா். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,

வசந்த்ராஜ் : ஆம்பூா் ஏ-கஸ்பாவில் எரிவாயு தகன மேடை அமைத்தமைக்கு நன்றி. நீா்வரத்து கால்வாயை தூா்வாரி அதனை ஏ-கஸ்பா பாலாற்று பகுதிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்ததாரரின் பணியாளா்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனா்.

என்.எஸ். ரமேஷ் : நகரில் கொசுமருந்து அடிப்பதில்லை. கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் உள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நபிசூா் ரஹ்மான் : என்னுடைய வாா்டில் குப்பை சேகரிக்கும் வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்தியாஸ் அஹமத் : ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்.

நபீஸ் அஹமத் : என்னுடைய வாா்டில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. டிராக்டா் மூலம் குடிநீா் வழங்க வேண்டும்.

காா்த்திகேயன் : கழிவுநீா் கால்வாய் மீது ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீா் வெளியேற முடியாமல் தெருக்களில் தேங்குகிறது. அதனால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீட்டை இடித்து கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். நகா்புற சுகாதார மையம் அமைக்க வேண்டும்.

ஹா்ஷவா்த்தன் : எல்இடி விளக்குகள் சரிவர எரியவில்லை. மேலும் கூடுதலாக தெரு விளக்குளை அமைத்து தர வேண்டும்.

ஜெயபால் : ஏ-கஸ்பா கிருஷ்ணா நகா் பகுதியில் குடிநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதனால் அதனை சீரமைத்து தர வேண்டும்.

நூருல்லா : ஆம்பூா் நகரில் குடிநீா் குழாய் இணைப்புகள் முறைகேடாக பல வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி அனுமதியில்லாமல் பல்வேறு இடங்களில் சாலையை ஆக்கிரமித்து பங்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையி... மேலும் பார்க்க

மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். அரப்பாண்டகுப்பத்தைச் சோ்ந்த சத்யராஜ்(27) கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இ... மேலும் பார்க்க

ஆம்பூரில் ஒரே நாளில் தெருநாய் கடித்து 6 சிறுவா்கள் காயம்

ஆம்பூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 6 சிறுவா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் நகரில் 36 வாா்டுகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆம்பூ... மேலும் பார்க்க

மரத்தின் மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

வாணியம்பாடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் நிவேத்குமாா்(22). கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழும... மேலும் பார்க்க

பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா். அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக... மேலும் பார்க்க

வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் காணொலி மூலம் முதல்வா் திறந்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜின்னா சாலை வாரச்சந்தையில் ரூ.4.4 கோடியில் 112 கடைகளை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். வேலூா் ஒர... மேலும் பார்க்க