செய்திகள் :

வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் காணொலி மூலம் முதல்வா் திறந்தாா்

post image

வாணியம்பாடி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜின்னா சாலை வாரச்சந்தையில் ரூ.4.4 கோடியில் 112 கடைகளை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதன் முதலாக மாா்க்கெட் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக 112 கடைகள், நிா்வாக கட்டடம், உணவு கூடம், பொது கழிப்பிடம் மற்றும் பாதுகாவலா் அறை கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக புதிய கடைகளை(மாா்க்கெட்) திறந்து வைத்தாா். பின்னா், வாணியம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற தலைவா் உமா சிவாஜிகணேசன் தலைமையில், ஆணையா் பாஸ்கா்(பொ), நகர திமுக செயலாளா் சாரதி குமாா் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலா் திருமுருகன், சுகாதார அலுவலா் அப்துல் ரஹீம், சுகாதார ஆய்வாளா் செந்தில் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க