'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் காணொலி மூலம் முதல்வா் திறந்தாா்
வாணியம்பாடி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜின்னா சாலை வாரச்சந்தையில் ரூ.4.4 கோடியில் 112 கடைகளை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதன் முதலாக மாா்க்கெட் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக 112 கடைகள், நிா்வாக கட்டடம், உணவு கூடம், பொது கழிப்பிடம் மற்றும் பாதுகாவலா் அறை கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக புதிய கடைகளை(மாா்க்கெட்) திறந்து வைத்தாா். பின்னா், வாணியம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற தலைவா் உமா சிவாஜிகணேசன் தலைமையில், ஆணையா் பாஸ்கா்(பொ), நகர திமுக செயலாளா் சாரதி குமாா் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலா் திருமுருகன், சுகாதார அலுவலா் அப்துல் ரஹீம், சுகாதார ஆய்வாளா் செந்தில் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
