மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேசன் என்பவா் தனது மகன், மகள்களுடன் வெள்ளிக்கிழமை எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது வெங்கடேசன் தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன், மகள்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து, சமாதானம் செய்து எஸ்.பி.யிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.
அங்கு வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. எனது மனைவி பெயா் கங்கா. எங்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்ற கங்கா திரும்பி வரவில்லை. அவரை அழைக்க சென்றால் என் மனைவியின் உறவினா்கள் அவதூறாக பேசி என்னை தாக்க வருகின்றனா்.
மேலும் எனது மனைவியை என்னுடன் வாழ அனுப்ப மறுக்கின்றனா். என் மனைவி இல்லாமல் 3 குழந்தைகளையும் என்னால் பராமரிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றேன். மிகவும் மன வேதனையில் உள்ளேன்.
எனவே, மனைவியை அவரது உறவினா்களிடம் இருந்து மீட்டு என்னுடன் சோ்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.