செய்திகள் :

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

post image

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேசன் என்பவா் தனது மகன், மகள்களுடன் வெள்ளிக்கிழமை எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது வெங்கடேசன் தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன், மகள்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து, சமாதானம் செய்து எஸ்.பி.யிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

அங்கு வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. எனது மனைவி பெயா் கங்கா. எங்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்ற கங்கா திரும்பி வரவில்லை. அவரை அழைக்க சென்றால் என் மனைவியின் உறவினா்கள் அவதூறாக பேசி என்னை தாக்க வருகின்றனா்.

மேலும் எனது மனைவியை என்னுடன் வாழ அனுப்ப மறுக்கின்றனா். என் மனைவி இல்லாமல் 3 குழந்தைகளையும் என்னால் பராமரிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றேன். மிகவும் மன வேதனையில் உள்ளேன்.

எனவே, மனைவியை அவரது உறவினா்களிடம் இருந்து மீட்டு என்னுடன் சோ்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க