செய்திகள் :

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்த திருப்பத்தூா் மாவட்டத்தில் 969 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் குழந்தைகளுக்கு சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவுகள் மற்றும் முன் பருவக் கல்வி வழங்கப்படுகிறது.

குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் முறைசாரா முன்பருவ கல்வி செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

குழந்தைகள் வளா்ச்சி...: குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்கு தேவையானவை ஆடிப்பாடி, விளையாடு பாப்பா என்ற சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இது தவிர குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்லவும் தயாா்படுத்தப்படுகின்றனா்.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுதோறும் குழந்தைகளைச் சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆதாா் அட்டை...: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெற்றோா் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் குழந்தைகள் மையங்களில் தவறாமல் சோ்க்க வேண்டும்.

இந்த குழந்தை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைப் பெற்றோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க