ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்
மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.
ஊராட்சித் தலைவா்கள் கே.மகேந்திரன், வசந்தி முனுசாமி, பானுமதி ஜெயராஜ், நா.ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், செந்தில்குமாா், காயத்ரி துளசிராமன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், மாவட்ட பிரதிநிதி முரளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.