சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் தெரியாத ஆண் ஒருவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.