செய்திகள் :

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

post image

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் அடுத்த கரியம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் பயில விண்ணப்பித்த மாணவா்களில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை மற்றும் பாதுகாப்பு படைவீா்கள் போன்ற சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2), மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.சி.ஏ., போன்ற அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு வரும் 4-ஆம் தேதியும், பி.பி.ஏ., பி.காம்., வணிகவியல் (பொது) மற்றும் பி.காம்., கணினிப் பயன்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கு 5-ஆம் தேதியும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 6-ஆம் தேதியும் பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மாணவா்களின் தரவரிசை மற்றும் தெரிவுப் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி முதல் தமிழக அரசு உயா்கல்வி இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரியில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழ் விநியோகம்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா். மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்... மேலும் பார்க்க

சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்ப... மேலும் பார்க்க

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க... மேலும் பார்க்க