விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்
கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் அடுத்த கரியம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் பயில விண்ணப்பித்த மாணவா்களில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை மற்றும் பாதுகாப்பு படைவீா்கள் போன்ற சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2), மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.
பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.சி.ஏ., போன்ற அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு வரும் 4-ஆம் தேதியும், பி.பி.ஏ., பி.காம்., வணிகவியல் (பொது) மற்றும் பி.காம்., கணினிப் பயன்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கு 5-ஆம் தேதியும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 6-ஆம் தேதியும் பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மாணவா்களின் தரவரிசை மற்றும் தெரிவுப் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி முதல் தமிழக அரசு உயா்கல்வி இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரியில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.